'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையில் கடத்தல் கும்பல் தலைவர் பல்சர் சுனில் இந்த கடத்தல் சம்பவத்தில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உண்டு. நடிகையை படம்பிடித்த சிம்கார்டை அவரது அலுவலத்தில் கொடுத்து பணம் பெற்றதாகவும் கூறினார்.
இதையடுத்து காவ்யா மாதவன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் நடிகை காவ்யா மாதவன் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "போலீசார் தொடர்ந்து என்னிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். என்னை இந்த வழக்கில் சேர்க்க சிலர் சதி செய்கிறார்கள். என்னை எந்த நேரத்திலும் போலீசார் கைது செய்யலாம். அதனால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டள்ளது. இந்த மனுமீது நாளை விசாரணை நடக்கிறது.