விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
புதுமுக இயக்குனர் நரசிம்மா இயக்கியுள்ள படம் யாகம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஆகாஷ்குமார், மிஸ்தி சக்ரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். கோட்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
அப்போது நெப்போலியன் பேசுகையில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ஆனால் அது நிறை வேறவே இல்லை. அதனால் இந்த யாகம் படத்தை இயக்கியிருக்கும் நரசிம்மா ரைக்டர் ஷங்கரின் அசோசியேட் என்று சொன்னதும் உடனே கால்சீட் கொடுத்தேன். ஷங்கர் படத்தில்தான் நடிக்க முடியவில்லை அவர் உதவியாளர் படத்திலாவது நடிப்போமே என்பதினால் ஏற்பட்ட ஆர்வம்தான் அது.
அந்தவகையில், இந்த படத்தை ரூ. 30 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் நிரசிம்மா. ஆக, ஷங்கரின் உதவியாளரும் அவரைப்போலவே பிரமாண்ட படமெடுத்திருக்கிறார். நல்ல சக்திக்கும், தீயசக்திக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாகியிருக்கிறது.
இதில் ஜெயப்பிரதா மேடம் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அவர் எனக்கு ஜோடி என்றதும் ரொம்ப சந்தோசமடைந்தேன். மிகப்பெரிய நடிகை அவர். அவருடன் இதுவரை நடித்தில்லை. ஆனால் பாராளு மன்றத்தில் ஹேமமாலினியும், ஜெயப்பிரதா மேடமும் உள்ளே நுழைகிறார்கள் என்றால், டோட்டல் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு இருவருமே அழகான நடிகைகள். அப்படிப்பட்ட ஒரு திறமையான அழகான நடிகையுடன் நடிக்கும் பெருமையும் இந்த யாகம் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது.
அதேபோல், இந்த படத்திற்கு இசையமைத்துள்ள கோட்டி என்னை ஒரு சிறிய பாடல் பாட வைத்து விட்டார். தமிழ், மட்டுமின்றி தெலுங்கிலும் நான்கு வரிகள் பாடினேன். ஆக, இந்த யாகம் படத்தில் நடித்ததில் எனக்கு பல பெருமைகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு பூஜை போடும்போது அமெரிக்காவில் இருக்கும் என்னை ஐதராபாத்துக்கு வருமாறு இயக்குனர் அழைத்தார். ஆனால் ஒரு பூஜைக்காக நான் எப்படி வருவது. படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னேன். அப்போது இந்த யாகம் படத்தின் பூஜை ஆந்திராவிலுள்ள 108 கோயில்களில் நடப்பதாக சொன்னார். அதைக்கேட்டு அசந்து விட்டேன். சாதாரணமாக ஒரு படத்திற்கு ஒரு இடத்தில்தான் பூஜை நடத்துவார்கள். ஆனால் இவர் 108 நரசிம்மர் கோயில்களில் பூஜை நடத்துவதாக சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது.
அதோடு, என்னையும் அமெரிக்காவில் உள்ள கோயிலில் ஒரு பூஜை நடத்துமாறு சொன்னார். ஆனால், இங்கு பகலாக இருக்கும்போது அங்கு இரவாக இருக்குமே என்று யோசித்தேன். ஆனபோதும், எனது வீட்டி லேயே ஒரு நரசிம்மர் போட்டோவை வைத்து உறவினர்கள வரவைத்து ஒரு பூஜை நடத்தினேன். அந்த வீடியோவையும் இயக்குனருக்கு அனுப்பி வைத்தேன். ஆக, இந்த யாகம் படம் பூஜையில் தொடங்கி ஒவ்வொரு விசயத்திலும் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது என்றார் நெப்போலியன்.