'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் வித்யாசாகர். ரஜினியின் சந்திரமுகி, கமலின் அன்பேசிவம், அர்ஜூனின் கர்ணா, விஜய் நடிப் பில் நிலாவே வா, ஆதி, மதுர, குருவி, கில்லி உள்பட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். வடிவேலு நடித்த எலி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகர், அதையடுத்து பாபிசிம்ஹா நடித்துள்ள திருட் டுப்பயலே-2 படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும், எப்போதுமே மெலோடி இசையால் மனதை வருடக்கூடியவரான வித்யாசாகர், இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியில் பாடல களை கொடுத்திருப்பவர் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம். அவரது ஆர்வத்தைப்பார்த்த இயக்குனர் சுசிகணேசன் அவருக்கு முழுசுதந்திரம் கொடுத்து விட்டாராம். அதனால், பல காட்சிகளில் டயலாக்கே இல்லாமல் தனது பின்னணி இசையால் பேசியிருக்கிறாராம் வித்யாசாகர். அந்த வகையில், இந்த திருட்டுப்பயலே-2விற்கு பிறகு வித்யாசாகரின் ரீ-என்ட்ரி அமோகமாக இருக்கும் என்கிறார்கள்.