'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தயாரித்து இயக்கியவர் கார்த்திக் நரேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் புதியபடம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.16) ஊட்டியில் தொடங்கியது.
துருவங்கள் பதினாறு படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றியடைந்ததை அடுத்து, நரகாசூரன் படத்தையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்குகின்றனர். இப்படத்தில் அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, 'மீசையை முறுக்கு' படப் புகழ் ஆத்மிகா முதலானோர் நடிக்கிறார்கள்.
'துருவங்கள் பதினாறு' படம் போல் இந்தப்படமும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது.