ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தயாரித்து இயக்கியவர் கார்த்திக் நரேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் புதியபடம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.16) ஊட்டியில் தொடங்கியது.
துருவங்கள் பதினாறு படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றியடைந்ததை அடுத்து, நரகாசூரன் படத்தையும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்குகின்றனர். இப்படத்தில் அரவிந்த்சாமி, 'மாநகரம்' புகழ் சந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, 'மீசையை முறுக்கு' படப் புகழ் ஆத்மிகா முதலானோர் நடிக்கிறார்கள்.
'துருவங்கள் பதினாறு' படம் போல் இந்தப்படமும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது.