இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வருடம் தெருநாய்களை கொல்வதில் தவறில்லை என மோகன்லால் சொன்னதை வைத்து அவரை பிராணிகளுக்கு எதிரானவரோ என தவறாக மதிப்பிட வேண்டாம். அது அந்த தெருநாய்களால் மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளக்கு பாதிப்பு ஏற்பட்டபோது அதை பொறுக்க முடியாமல் அவர் சொன்ன கருத்தே தவிர, மிருகவதையை ஒருபோதும் அவர் விரும்பியது இல்லை. மோகன்லால் எந்த அளவுக்கு இயற்கையை விரும்புகிறாரோ அந்த அளவுக்கு மிருகங்கள் மீதும் பிரியம் காட்டுபவர் தான்..
அந்தவகையில் நாய்கள் வளர்ப்பதில் பிரியரான மோகன்லால், தற்போது தனது வீட்டிற்கு புதிய வரவாக ராட்வெல்லரர் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி வந்துள்ளார்.. இதற்கு ஸ்பைக் என பெயரும் வைத்துள்ளார். ஏற்கனவே மோகன்லாலிடம் உள்ள சைபீரியன் ஹஸ்கி இனத்தை சேர்ந்த 'ஸ்டார்ம்' என்கிற நாய், நிறைய 'டாக் ஷோ'க்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.