'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள 'ஸ்பைடர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருடைய அப்பா நடிகர் கிருஷ்ணா, மனைவி நம்பரதா, மகன் கௌதம், மகள் சிதாரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ் பாபு, இயக்குனர்கள் என்னைப் பொறுத்தவரையில் கடவுளுக்கு சமமானவர்கள் என்றார்.
“ஒரு படத்தின் கதை எனக்குப் பிடித்துவிட்டால் அதில் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். இயக்குனர்கள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் எனக்கு மிகப் பெரிய வெற்றிகளைக் கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இயக்குனர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள்.
இயக்குனர் முருகதாஸ் இந்தக் கதையை என்னிடம் சொன்ன போது, ரசிகர்கள் டெக்னிக்கல் விஷயங்களையும், திரைக்கதையையும் பார்த்து வியந்து போவார்கள் என்றார். டப்பிங் பேசும் போது நானும் மிகவும் வியந்து போனேன். இந்த அளவிற்கு மிகச் சரியாக ஒரு இரு மொழிப் படத்தை வேறு யாராலும் தர முடியாது. பத்து வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸைப் பார்த்தேன். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே இருக்கிறார். இந்திய அளவில் பெரிய இயக்குனர் எனப் பெயரெடுத்தாலும் அவர் மாறவில்லை.
வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லாத அளவிற்கு எனக்கு அற்புதமான ரசிகர்கள் அமைந்திருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக எனக்கு எந்த நிபந்தனையற்ற ஆதரவையும் அவர்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்,” என்றார் மகேஷ் பாபு.