கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
எழுத்தாளர் மீரா கதிரவன், அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரிக்கவும் செய்தார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள சவுந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் மீரா கதிரவன்.