அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
எழுத்தாளர் மீரா கதிரவன், அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரிக்கவும் செய்தார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள சவுந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் மீரா கதிரவன்.