ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எழுத்தாளர் மீரா கதிரவன், அவள் பெயர் தமிழரசி என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விழித்திரு என்ற படத்தை இயக்கி, நண்பர்களுடன் இணைந்து அவரே தயாரிக்கவும் செய்தார். இதில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரவு, தன்ஷிகா, எரிக்கா பெர்ணாண்டஸ், அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சத்யன் மகாலிங்கம் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. தற்போது வருகிற அக்டோபர் மாதம் 6ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறியிருப்பதாவது:
இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள சவுந்தர்யன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர் மீரா கதிரவன்.