தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் அடுத்த படம் பற்றிய பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. காற்று வெளியிடை தோல்வி அடைந்ததால் அடுத்த படத்தை மிகுந்த கவனத்துடன் இயக்க இருக்கிறார் மணிரத்னம். ஏற்கெனவே அவர் தயார் செய்து வைத்திருந்த ஸ்கிரிப்ட்டைத்தான் இப்போது படமாக இயக்க இருக்கிறார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17ஆவது தயாரிப்பில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிரத்னம் இயக்குகிறார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.