டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாரிஜாதம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார். இயக்குர் கே.பாக்யராஜின் தூரத்து உறவினர். அதன் பிறகு போடா போடி, என்றென்றும், தகராறு, ஆஹா கல்யாணம், நாய்கள் ஜாக்கிரதை உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். தரண் குமாரும், நகர்வலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த தீக்ஷிதாவும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
தற்போது அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தரண் குமார், தீக்ஷிதா திருமணம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.பாக்யராஜ் குடும்பத்தினருடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நண்பர்கள், திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.