ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
'குற்றம் 23' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழன். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து சில தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக மஞ்சு வாரியர் விலகிவிட்டார்.
கடைசி நேரத்தில் மஞ்சுவாரியர் விலகியதால் அதிர்ச்சியடைந்த அறிவழகன், இப்போது அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அறிவழகன், பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை என்பதால், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நயன்தாரா அறிவழகன் இயக்கத்தில் நடிக்க நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்த படத்தில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.