ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'குற்றம் 23' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழன். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து சில தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக மஞ்சு வாரியர் விலகிவிட்டார்.
கடைசி நேரத்தில் மஞ்சுவாரியர் விலகியதால் அதிர்ச்சியடைந்த அறிவழகன், இப்போது அவருக்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அறிவழகன், பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை என்பதால், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் நயன்தாரா அறிவழகன் இயக்கத்தில் நடிக்க நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்த படத்தில் ராஜ்கிரணும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.