ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஹிட் படங்கள் தருவதையே தனது தாரக மந்திரமாக கொண்டவர் மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத். ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து 'ராஜமாணிக்கம்', அதன்பின் மோகன்லாலை வைத்து சோட்டா மும்பை ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் துல்கர் சல்மானை வைத்து 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை இயக்கியவர், அதைத்தொடர்ந்து மலையாள ரசிகர்களை கிறங்கடித்த 'பெங்களூரு டேய்ஸ்' மற்றும் பிரமேம் ஆகிய படங்களை தயாரித்தார்.
தற்போது பஹத் பாசிலை வைத்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் அன்வர் ரஷீத். இந்தநிலையில் அடுத்ததாக அவர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் துல்கர் சல்மான் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆனால் அன்வர் ரஷீத்தோ தனது தற்போதைய கவனம் எல்லாம் பஹத் பாசில் நடிக்கும் 'ட்ரான்ஸ்' படத்தில் தான் என்றும், அடுத்து துல்கர் படத்தை இயக்குவது உண்மைதான் என்றாலும் அதில் துல்கர் ஒன்றும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.