தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 65 நாட்களாகின்றன.. இந்த காலகட்டத்தில் திலீப்பின் ஜாமீன் மனு இரண்டுமுறை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு மணி நேர சிறப்பு அனுமதியில் சிறையிலிருந்து வெளியேறி தனது தந்தையின் நினைவு நாள் சடங்குகளை முடித்துவிட்டு உடனே சிறைக்கு திரும்பிவிட்டார். இந்தநிலையில் மூன்றாவது முறையாக ஜாமீன் அளிக்குமாறு திலீப் மனு செய்யவுள்ளார்..
இதற்கு முன் திலீப்பின் நண்பர் இயக்குனர் நாதிர்ஷா தனக்கு முன்ஜாமீன் கேட்திருந்த மனுவின் மீது விசாரணை செய்த நீதிபதி, போலீசாரிடம் சராமரியாக சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக “எதற்காக இந்த ஆறு மாதங்களாக இந்த வழக்கின் விசாரணையை சினிமா திரைக்கதை போல இழுத்துக்கொண்டு செல்கிறீர்கள்.. இதன்மூலம் யாரை திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள்” என கேள்விகளை எழுப்பினார். திலீப் கைது செய்யப்பட்ட இந்த 65 நாட்களில் போலீசார் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார்களே தவிர அவருக்கெதிரான ஸ்திரமான ஆதாரம் எதையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.