பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஜூனியர் சிங்கர் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் திறமையைக்காட்டி, டைட்டில் வென்று, அதன்பின் பாடுவதற்கு வாய்ப்பு பெற குழந்தைகளை தயார்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.. ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத, அதேசமயம் திறமையுள்ள குழந்தைகளுக்கு சோஷியல் மீடியா சத்தமில்லாமல் பிளாட்பாரம் அமைத்துக்கொடுத்து வருகிறது.. அப்படித்தான் கேரளாவில் காயங்குளம் பகுதியை சேர்ந்த சிறுமி சிவகங்காவும் தனது பாடும் திறமையாமல் நடிகர் ஜெயசூர்யா மூலம் சினிமாவில் அடையாளம் காட்டப்பட இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரோரம் நின்று மைக்கை பிடித்தபடி ஒரு சிறுமி (சிவகங்கா) 'புலி முருகன்' படத்தில் இடம்பெற்ற 'மானத்த மாரிக்குரும்பே' பாடலை மனம் நெகிழும் வகையில் பாடிய வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியானது. இந்த சிறுமியின் குரலால் ஈர்க்கப்பட்ட நடிகர் ஜெயசூர்யா, அந்த சிறுமி பற்றிய விபரங்களை யாராவது கொடுத்து உதவுமாறு அந்த வீடியோவை பகிரவும் செய்தார்.. அந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, இரண்டாயிரம் பேர்களால் பகிரவும் பட்டது..
இதில் ஜெயசூர்யாவுக்கு சிறுமி பற்றிய தேவையான விபரங்களும் கிடைத்தது. பின்னர் அந்த சிறுமி சிவகங்காவை சந்தித்த ஜெயசூர்யா, அந்த சிறுமிக்கு தற்போது அடுத்ததாக தான் நடிக்கவுள்ள 'காப்ரி' என்கிற படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பை தந்துள்ளார். அதுமட்டுமல்ல, படத்தில் முக்கியமான கேரக்டரிலும் சிவகங்காவை நடிக்கவைக்க இருக்கிறாராம்.