ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திர மாநிலம், தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரிக்கப்பட்டது. தற்போது ஐதராபாத் இரண்டு மாநிலங்களின் தலைநகராக உள்ளது. பத்து வருடங்களுக்குப் பிறகு ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக மட்டுமே செயல்படும். ஆந்திராவின் தலைநகராக பத்து ஆண்டுகள் கழித்து செயல்பட அமராவதி நகரம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நகரை புதிதாக நிர்மாணிப்பதற்கு சுமார் 58000 கோடி செலவிடப்பட உள்ளது.
அமராவதி நகர நிர்மாணத்திற்காக லண்டனைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவர் நகர டிசைனை உருவாக்கி வருகிறார். ஆனால், அந்த டிசைனில் சில மாற்றங்களைச் செய்ய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார். அந்த டிசைன் எப்படி வரலாம் என்பதற்கான மாற்றங்களைக் குறித்து ஆலோசனை சொல்ல பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை லண்டனுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்.
அனைத்து வசதிகளும் கொண்ட எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அந்த நகரம் உருவாக உள்ளது. 'பாகுபலி' படத்தில் மகிழ்மதி பேரரசை கற்பனையாக மிகவும் அருமையாக ராஜமௌலி உருவாக்கியதைப் பார்த்தே சந்திரபாபு நாயுடு அவருக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார்.
இதற்காக லண்டன் செல்லும் ராஜமௌலியின் மொத்த செலவையும் ஆந்திர அரசே ஏற்க உள்ளதாம். தன்னுடைய இந்த பணிக்காக ராஜமௌலி எந்தவிதமான கட்டணத்தையும் அரசிடம் கேட்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூர் என்ற ஊர் தான் ராஜமௌலியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.