ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகை வாணி விஸ்வநாத். 80களின் கடைசியில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தார். தமிழை விட தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அதிகப் படங்களில் நடித்தார். தமிழில் சிவாஜிகணேசன் நடித்த 'மண்ணுக்குள் வைரம்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த் நடித்த 'நல்லவன், பூந்தோட்ட காவல்காரன்' ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் கேரள அரசியலில் இறங்காமல் ஆந்திர அரசியலில் இறங்க வாணி விஸ்வநாத் முடிவு செய்துள்ளார். சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
'ஜெய ஜெய நாயகா' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய மேனேஜரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அப்போது அவருடைய மேனேஜர் அரசியலில் இறங்க ஆசையா எனக் கேட்க அப்படியே அரசியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது என வாணி சொல்கிறார்.
வாணியின் அப்பா விஸ்வநாத் ஒரு ஜோசியரும் கூட. சிறு வயதிலேயே எதிர்காலத்தில் வாணி நடிகையாகவும், அரசியலிலும் இறங்குவார் என ஜோசியம் சொல்லியிருக்கிறாராம். ஆந்திர அரசியலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை ரோஜாவுக்கு எதிராக வாணி விஸ்வநாத் களமிறங்கலாம் எனத் தெரிகிறது.