ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
மிஷ்கின் இயக்கத்தில், தான் நடித்த துப்பறிவாளன் படம் பற்றியும், தன் அரசியல் பிரவேசம், நடிகர் சங்க கட்டடம், காதல் கல்யாணம், இப்படி ஒன்று விடாமல், புட்டு புட்டு வைக்கிறார், விஷால். இனி, அவருடன் பேசலாம்:
துப்பறிவாளன் படம் பற்றி ?
மிஸ்கின் இயக்கத்தில், நான் முதல் முறையாக நடிக்கும் படம்; இது ஒரு துப்பறியும் கதை. பழைய ஜெய்சங்கர் படங்களை நினைவுபடுத்தும் வகையில், புது கதைக் களத்துடன் இந்த படம் தயாராகியுள்ளது. கதை, ஒரு சின்ன புள்ளியில் துவங்கி, வேறு எங்கெங்கோ பயணிக்கும். ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒரு, க்ளூ கண்டுபிடித்து, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு, செம த்ரில்லிங்காக இந்த படம் இருக்கும்.
படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்காங்க போல ?
ஆண்ட்ரியா, பாக்யராஜ், வினய் என, பல வில்லன்கள் இந்த படத்தில் உள்ளனர். ஒவ்வொருவரின் கேரக்டரும், ஒரு யூகத்தின் அடிப்படையில் இருக்கும். இந்த படத்தில், இதுவரை பார்க்காத, பாக்யராஜை பார்க்கலாம். ஆண்ட்ரியாவுக்கு, இந்த படத்தில் சண்டை உண்டு.
நடிகர் சங்க கட்டடம் என்ன ஆச்சு?
தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். நடிகர் சங்க கட்டட வேலையும் துவங்கியாகி விட்டது. 2018 டிசம்பரில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, திறப்பு விழாவை நடத்த, ஓடி ஓடி உழைக்கிறோம். அடுத்த தேர்தலிலும் போட்டியிடப் போகிறேன்; அதற்கு முன், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்.
நீட் தேர்வில் உங்க நிலை என்ன ?
முதலில், நீட் தேர்வை, அரசியல்வாதிகளுக்கு வைக்க வேண்டும். எட்டு மாதங்களாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இதற்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. அரசு வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளை, அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகள் போல், அனைத்து வசதிகளும் உள்ள பள்ளிகளாக மாற்ற வேண்டும். அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, இந்த இரண்டு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தலைவன் வருகிறான் என்ற பாடல் வரிகள், நீங்கள் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக உணர்த்துகின்றனவே?
இந்த விஷயத்தில், சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. அதிகாரத்தில் இருந்தால், மக்களுக்கு அதிகமாக நன்மை செய்ய முடியும். கண்டிப்பாக, நானும் அரசியலுக்கு வருவேன். நல்லது செய்வது தான், அரசியல் என்றால், கண்டிப்பாக, நான் அரசியலுக்கு வருவேன்.
ரஜினி, கமல் அரசியல் வருகை பற்றி...
இரண்டு பேருமே, இப்போது தான், பொது விஷயங்களை பேசத் துவங்கியுள்ளனர். அரசியலுக்கு வரப் போவதாக, இரண்டு பேருமே உறுதியாக தெரிவிக்கவில்லை. என்னை பொறுத்தவரை, கமல் சாரை விரும்புகிறேன். அவரது தைரியம், முடிவு எடுக்கும் தன்மை, சமுதாயத்தில் நடக்கும் தவறை சுட்டிக் காட்டும் விஷயம் ஆகியவை, அவரிடம் என்னை அதிகம் கவர்ந்தவை.
உங்க கல்யாணம் எப்போது தான் நடக்கும்?
நடிகர் சங்க கட்டட வேலை முடிந்த பின் தான், கல்யாணம் நடக்கும். கண்டிப்பாக எல்லாருக்கும் அழைப்பு வரும்.
அரசியலுக்கு வந்தால் எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் தருவீங்க?
ஒரு பக்கம், பணத் தட்டுப்பாடு என்கின்றனர்; ஆனால், அரசியல்வாதிகள் சம்பளம் மட்டும், பல மடங்கு எகிறுது. இது, எப்படி என தெரியவில்லை. உ.பி., மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதுபோல், தமிழகத்திலும் தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை வலுக்கிறது. ஆனால், அரசு, இதை ஏற்க மறுக்கிறது. அரசியலுக்கு யார் வந்தாலும், மருத்துவம், கல்வி ஆகிய இரண்டையும், இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதே, என் கோரிக்கை.