திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஷால் நடிப்பில் இன்று(செப்., 14) வெளியாகியுள்ள துப்பறிவாளன் படம் இன்றே இணையதளத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழ் திரைத்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் போன்ற இணையதளங்கள் தான். புதிய திரைப்படங்கள் வெளிவந்த உடனேயே இந்த இணையதளங்களின் பக்கங்களில் வெளிவந்து விடும். தயாரிப்பாளர்களுக்கு சவால்விட்டே படத்தை வெளியிட்டு வந்தனர். இந்த இணையதளங்களை நடத்துபவர்களை கண்டிப்பாக பிடித்தே தீருவது என்று விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உறுதி பூண்டனர்.
தமிழ்கன் இணையதளத்தின் நிர்வாகியான கவுரி சங்கர் என்பவர், சென்னையில் இருதினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழ்கன் தளத்தின் நிர்வாகி தான், தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதோடு நூற்றுக்கணக்கான போலி ஐடியுடன் புதிய படங்களை பதிவேற்றம் செய்திருப்பதும், ஆபாச இணைய தளங்களுக்கு வீடியோக்கள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விஷால் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் வெளியான இன்றே துப்பறிவாளன் படம் தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது விஷால் உள்ளிட்ட துப்பறிவாளன் படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சொல்லி வைத்தார் போன்று துப்பறிவாளன் படத்தை வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட இணையதளங்கள் ரிலீஸ் செய்துள்ளன.