ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த படத்திற்காக சென்னையை அடுத்து பூந்தமல்லியில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தில் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அதில் வடிவேலு, பார்வதி ஓமணக்குட்டன் மற்றும் நூற்றுக்கணக்கான நடன மங்கைகளும் நடித்தனர்.
இந்த நிலையில், தற்போது அப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்படுகிறது. மேலும், இந்த படத்திலும் வடிவேலு இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவேலு இளவட்டமாக ஸ்லிம் கெட்டப்பில் நடிக்கிறாராம். மேலும், முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகத்தில் நிறைய புதுமைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிம்புதேவன், டைரக்டர் ஷங்கர் படங்களில் வருவது போன்ற கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் கையாளப்போகிறாராம். குறிப்பாக மாயமந்திர ஜால வித்தைகள் கொண்ட ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளதாம். அந்த பாடலின் பெரும்பகுதி கிராபிக்ஸ் கொண்டு தான் உருவாக்கப்படுகிறதாம். ஆக, இம்சை அரசன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள்.