'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் மேஜிக்மேன்.
இதில் மேஜிக்மேன் விஜய்க்கு அதிரடியான வேடமாம். அதாவது அவர் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்கிறாராம். அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவராம். ஆனால், அந்த ஐந்து பேரையும் டாக்டர் விஜய் கொலை செய்ததாக அவர் மேல் பழி விழுந்து விடுமாம். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மெர்சல்.
கதைப்படி, மேஜிக்மேன் கெட்டவராக தெரிந்தாலும் அவர் செய்யும் கொலைகள் அனைத்தும் நல்ல நோக்கத்தில் தான் செய்யப்படுமாம். அந்த வகையில் மெர்சல் படத்தில் டாக்டர் விஜய் நல்லவராகவும், மேஜிக்மேன் விஜய் கெட்டவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார் என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ் என மெர்சல் பட வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.