தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் மேஜிக்மேன்.
இதில் மேஜிக்மேன் விஜய்க்கு அதிரடியான வேடமாம். அதாவது அவர் ஐந்து பேர்களை கடத்திச்சென்று கொலை செய்கிறாராம். அவர்களில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவராம். ஆனால், அந்த ஐந்து பேரையும் டாக்டர் விஜய் கொலை செய்ததாக அவர் மேல் பழி விழுந்து விடுமாம். இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மெர்சல்.
கதைப்படி, மேஜிக்மேன் கெட்டவராக தெரிந்தாலும் அவர் செய்யும் கொலைகள் அனைத்தும் நல்ல நோக்கத்தில் தான் செய்யப்படுமாம். அந்த வகையில் மெர்சல் படத்தில் டாக்டர் விஜய் நல்லவராகவும், மேஜிக்மேன் விஜய் கெட்டவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார் என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ் என மெர்சல் பட வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.