ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாரும் எதிர்பாராத விதமாக மணிரத்தினம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் சிம்பு. விஜய் சேதுபதி இன்னொரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். சிம்பு மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது:
மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. மணிரத்னமும் எனது நண்பர்தான். செப்-2ஆம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்க சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார். ரஜினி, கமல் என பெரிய நடிகர்களை வைத்து இயக்கியவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தியவர் அந்தவகையில் இயக்குனர் மணிரத்னமும் குரு ஸ்தானத்தில் இருப்பவர் தான். உனக்கு சரியாக பட்டால் போய் பார்த்துவிட்டு வா. என அனுப்பினேன்.
சிம்புவும், நயன்தாராவும் நடித்து தமிழில் வெளிவந்த இது நம்ம ஆளு படத்தை சரஸூடு என்ற பெயரில் தெலுங்கில் நானே வெளியிடுகிறேன். தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறேன் என நினைத்து விடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது.. இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது என்றார் டி.ராஜேந்தர்.