600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தமிழில் கம்பீரம், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பிரணதி. மலையாளத்தில் பார் தி பீப்பிள், 4 ஸ்டூடன்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத பிரணதி சென்னையில் வசித்து வருகிறார்.
கேரள மாநிலம் தலச்சேரி அவரது சொந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் பிரணதியின் தாத்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்க்க அங்கு சென்றிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பிரணதியின் தாய் மாமன் அரவிந்த் பிரணதியின் வீட்டுக்கு சென்று அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து பிரணதி தலசேரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தாய்மாமன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரணநிதிக்கும், அவரது தாய்மாமன் அரவிந்துக்கும் இடையில் தலசேரியில் உள்ள பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதையொட்டியே அரவிந்த் பிரணதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"கொஞ்ச நாட்களாகவே அரவிந்த் என்னை மிரட்டி வருகிறார். நான் இங்கு வந்ததும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் எனது நெருங்கிய உறவினர்தான் என்றாலும் வேறு வழியில்லாமல்தான் போலீசில் புகார் கூறினேன்" என்கிறார் பிரணதி.