வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றி வரும் தமிழ்கன் என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் ஒருவரான கவுரி சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்கன் போன்ற சட்டவிரோத இணையதளங்களக்கு திரைத்துறையினரே உதவி வருகிறார்கள் என்ற திடுக்கிடும் தகவலை தயாரிப்பாளர் சங்க பொருளாளரும், பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்கன் கவுரி சங்கங்கரை பல நாட்கள் திட்டமிட்டு ஆதாரத்துடன் பிடித்தோம். அதேபோன்று தமிழ் ராக்கர்ஸ் செயல்படும் இடத்தையும், யார் செயல்படுத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம். தக்க ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். ஆதாரம் கைக்கு வந்ததும். அவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற சட்டவிரோத இணையதளங்களில் படங்களை பதிவேற்றம் செயற்வதற்கு திரைத்துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் உதவி செய்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் பணத்துக்காக அவர்கள் இந்த பெரிய தவறை செய்வதாக கேள்விப்படுகிறோம். அவர்களை கண்டுபிடித்து களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். என்றார்.