தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள 'துப்பறிவாளன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ஆனால், கடைசி நேரத்தில் படம் இன்று வெளியாகுமா, ஆகாது என நேற்று நள்ளிரவு வரை பஞ்சாயத்து நடைபெற்றிருக்கிறது. இந்தப் படத்தை விஷால் நடித்த 'கத்திச் சண்டை' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியிடம் 'துப்பறிவாளன்' படத்தைத் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தம் போட்டது.
ஆனால், முதல் பிரதிக்காக பேசியபடி சுமார் 20 கோடி ரூபாய் பணத்தை விஷால் நிறுவனத்திடம் வழங்கவில்லை. சுமார் 10 கோடியை மட்டுமே மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால் வழங்கியிருக்கிறார். மீதி 10 கோடி ரூபாய் பணத்தை அவர் ஒப்பந்தப்படி வழங்கவில்லை. அதனால், படத்தைத் தானே சொந்தமாக வெளியிட விஷால் முடிவு செய்து, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பெயரையும் விளம்பரங்களில் இருந்து நீக்கினார்.
ஜுலை மாதம் வெளியிடப்பட்ட 'துப்பறிவாளன்' டீசரில் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பெயர் இடம் பெற்றிருக்கும், சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட டிரைலரில் அவர்கள் பெயர் இருக்காது. இதனிடையே 'துப்பறிவாளன்' படத்தின் பெயரைச் சொல்லி சிலரிடம் பைனான்ஸ் வாங்கியிருக்கிறார் நந்தகோபால். இந்த விவகாரம் படத்தின் வெளியீட்டின் போது சிக்கல் ஏற்படுத்தும் என்பது சம்பந்தப்பட்டவர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று இரவு இந்த விவகாரம் சிக்கலாக மாறி படத்தின் வெளியீட்டிற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் விஷால் எங்கெங்கோ பணத்தைப் புரட்டி தரவேண்டியவர்களுக்குத் தந்து செட்டில் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷாலுக்கே இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என சிலர் வருந்தியிருக்கிறார்கள். மற்றவர் செய்த தவறுக்கு தானே பொறுப்பேற்று தன் படம் சிக்கலில்லாமல் வெளிவர விஷால் செய்த முயற்சியால் படத்திற்கு வந்த சிக்கல் நீங்கி, நள்ளிரவுக்கு மேல்தான் படத்திற்கான 'கேடிஎம்'கள் வெளியிடப்பட்டுள்ளது.