தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாங்கள் நடிக்கும் படத்தை மக்களிடம் மிகச் சரியாகக் கொண்டு போய் சேர்ப்பதில் ஹிந்தி நட்சத்திரங்களிடம் மற்ற மொழி நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஷாரூக் கான், சல்மான் கான், ஆமீர்கான் உள்ளிட்ட பல கோடி வசூலை அள்ளும் நடிகர்கள் கூட பல ஊர்களில் நடக்கும் பிரமோஷன்கள், பாகுபாடு இல்லாமல் அனைத்து மீடியாக்களுக்கும் பேட்டிகள் என அவர்களுடைய படங்கள் வெற்றிபெற பாடுபடுவார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் சில நடிகர், நடிகைகள் அவர்கள் நடிக்கும் படங்களைப் பற்றிய எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டார்கள். ஒரு சிலர் தேர்ந்தெடுத்து ஒரு சில மீடியாக்களுக்கு மட்டுமே பேட்டி கொடுப்பார்கள். அவர்களில் முதலிடம் நயன்தாராவுக்கு, அடுத்த இடம் ஜோதிகாவுக்கு. நயன்தாரா அவர் படம் பற்றி பேசச் சொன்னால் வாயே திறக்க மாட்டார். ஆனால், அவருடைய பினாமி தயாரிப்பு எனச் சொல்லப்படும் 'அறம்' படத்திற்காக சமீபத்தில் டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
ஜோதிகா அவருடைய கணவரான சூர்யாவின் நிறுவனம் தயாரிப்பில் நடித்து நாளை வெளிவரும் 'மகளிர் மட்டும்' படத்திற்காக எந்த பிரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். சூர்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க சூர்யாவுக்கு நெருக்கமான இருவருக்கு மட்டும் பேட்டி கொடுத்திருக்கிறார். நேற்று நடந்த பத்திரிகையாளர் காட்சிக்கு கூட திடீரென வந்த ஜோதிகா அனைவருக்கும் நன்றி என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு விருட்டென்று போய்விட்டார். அவர் நாயகியாக முன்னணியில் இருந்த போது எந்த பேட்டியையும் கொடுக்க மாட்டார். இப்போது மீண்டும் நடிக்க வந்த போதும் அதையே பின்பற்றுகிறார். ஜோதிகா பத்திரிகையாளரை சந்திக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
சில கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தப்படும் படங்களே ஓடாமல் இருக்கும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களே படங்களைப் பற்றிப் பேசவில்லை என்றால் எப்படி படங்கள் ஓடும் என வருத்தப்படுகிறார்கள் படத்தை பணம் போட்டு வாங்கி வெளியிடுபவர்கள்.