‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டைரக்டர் தரணியால் 'தில்' படத்தில் என்கவுன்டர் சங்கராக அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. 2000-ஆம் வருட ஆரம்பத்தில் இருந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் மிரட்டல் வில்லனாக வலம் வந்த இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான என்னை அறிந்தால், அநேகன் ஆகிய படங்களில் தலைகாட்டியதோடு சரி, அதன்பின் ஆளையே காணோம். விசாரித்து பார்த்ததில் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என மொழிக்கு ஒன்றாக சில படங்களில் நடித்துவரும் இவர் புதிதாக 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த தயாராகி வருகிறார்.
“நான் என்னை எப்போதுமே பிரபலம் என நினைத்துக் கொண்டதில்லை. நான் ஒரு நடிகன். அந்த பெருமை மட்டுமே எனக்கு சொந்தம். படங்கள் இல்லாத நேரத்தில் சாலையில் இறங்கி மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் உரையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலை. அதைத்தான் தற்போது செய்து வருகிறேன். இவர்களிடமிருந்து பெற்ற அனுபவங்களை கொண்டுதான் இந்த 'ஆவிட் மைனர்ஸ்' என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளேன். இதன் நோக்கம் அனுபவங்களை பகிர்வதும் நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும் தான். இதில் கலந்து கொள்பவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் தான்” என தனது புதிய களம் பற்றி விவரிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி.