டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஜோதிகா, சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு நடிப்பதிலிருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகு அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்ததும் மீண்டும் நடிக்கும் ஆசை அவருக்கு வந்தது.
மலையளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தின் தமிழ் ரீமேக்கான '36 வயதினிலே' படம் மூலம் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட அந்தப் படத்தில் ஜோதிகாதான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டு அவர் நடிக்க சம்மதித்த படம் 'மகளிர் மட்டும்'.
தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளார்கள். படம் முடிந்து பல மாதங்களாகியும் வெளியீட்டை தாமதப்படுத்தி வந்தார்கள். எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் பெரிய விளம்பரங்களும் இல்லாமல் இந்தப் படம் நாளை மறுநாள் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது.
'36 வயதினிலே' படத்தை பிரபலப்படுத்திய அளவிற்குக் கூட இந்தப் படத்தை பிரபலப்படுத்தவில்லை. படம் பார்க்க வந்தால் பட்டுப் புடவை இலவசம் என அந்தக் கால ஐடியாக்களை வைத்து மக்களை தியேட்டருக்கு வரவழைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். மகளிரை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு கதையில், புடவை இலவசம் என மகளிரை மட்டம் தட்டும் யுக்தி தேவையா என்றும் சிலர் கேட்கிறார்கள்.