டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய ஒரிஜினல் பேஸ்புக் பக்கத்தில் இருந்து புகைப்படங்களையும், தகவல்களையும் பதிவிறக்கம் செய்து எஸ்.வி.சேகர் வெங்கட்ராமன் என்ற போலி பேஸ்புக் கணக்கு ஒன்றை துவக்கி உள்ளனர். அதில் என் பெயரில் தவறான பல தகவல்களையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டு வருகிறது.
இது எனது பொது வாழ்விற்கும், என் அரசியல் சார்பு நிலைக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவிடப்படுகிறது. எனவே அந்த பக்கத்தை நீக்குவதோடு. அதனை உருவாக்கியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.