Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றிய தமிழ்கன் நிர்வாகி கைது: விஷால் டீமின் அதிரடி

13 செப், 2017 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Tamilgun-admin-arrested

தமிழ் சினிமாவில் பெரும் தலைவலியாக இருந்து வந்தது தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் என்ற இரு இணையதளங்கள். புதிய திரைப்படங்கள் வெளிவந்த உடனேயே இந்த இணையதளங்களின் பக்கங்களில் வெளிவந்து விடும். தயாரிப்பாளர்களுக்கு சவால்விட்டே படத்தை வெளியிட்டு வந்தனர். இதனை நடத்துவது யார், எங்கிருந்து நடத்துகிறார்கள் என்ற தகவல் தெரியாமல் இருந்து வந்தது. விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தயரிப்பாளர் சங்கத்திற்கு வந்த உடன் இந்த இணையதளங்களை நடத்துபவர்களை கண்டிப்பாக பிடித்தே தீருவது என்று உறுதி பூண்டனர்.

இதன் முதல் கட்டமாக இந்த இரு இணைய தளங்கள் குறித்தும் கடந்த ஏப்ரல் மாதம் 27ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதோடு இதை கண்டுபிடிப்பதற்கென்று தனி டீம் ஒன்றை அமைத்தனர். இந்த டீம் கடுமையாக போராடி தற்போது தமிழ்கன் இணையதளத்தை இயக்குபவரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரி சங்கர் என்ற நபரே தமிழ்கன் தளத்தின் அட்மினாக பணியாற்றி உள்ளார். இவர் திருப்பத்தூரில் வீடியோ கடை நடத்தி வருகிறார். அவரை திருவல்லிக்கேனி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழ்கன் தளத்தின் நிர்வாகி தான் தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதோடு நூற்றுக்கணக்கான போலி ஐடியுடன் புதிய படங்களை பதிவேற்றம் செய்திருப்பதும், ஆபாச இணைய தளங்களுக்கு வீடியோக்கள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

நேற்று இரவு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, செயற்குழு உறுப்பினர் உதயா ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்தனர். இதுகுறித்து விஷால் கூறும்போது "புதிய திரைப்படங்களை இணைய தளத்தில் பதிவேற்றும் முக்கிய நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். அவர்குறித்த தகவல்களை போலீசிடம் கொடுத்துள்ளோம். அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை போலீசார் தெரிவிப்பார்கள்" என்றார்.

கவுரி சங்கர் மீது வழக்கு பதிவு செய்து இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in