தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் பெரும் தலைவலியாக இருந்து வந்தது தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் என்ற இரு இணையதளங்கள். புதிய திரைப்படங்கள் வெளிவந்த உடனேயே இந்த இணையதளங்களின் பக்கங்களில் வெளிவந்து விடும். தயாரிப்பாளர்களுக்கு சவால்விட்டே படத்தை வெளியிட்டு வந்தனர். இதனை நடத்துவது யார், எங்கிருந்து நடத்துகிறார்கள் என்ற தகவல் தெரியாமல் இருந்து வந்தது. விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தயரிப்பாளர் சங்கத்திற்கு வந்த உடன் இந்த இணையதளங்களை நடத்துபவர்களை கண்டிப்பாக பிடித்தே தீருவது என்று உறுதி பூண்டனர்.
இதன் முதல் கட்டமாக இந்த இரு இணைய தளங்கள் குறித்தும் கடந்த ஏப்ரல் மாதம் 27ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதோடு இதை கண்டுபிடிப்பதற்கென்று தனி டீம் ஒன்றை அமைத்தனர். இந்த டீம் கடுமையாக போராடி தற்போது தமிழ்கன் இணையதளத்தை இயக்குபவரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த கவுரி சங்கர் என்ற நபரே தமிழ்கன் தளத்தின் அட்மினாக பணியாற்றி உள்ளார். இவர் திருப்பத்தூரில் வீடியோ கடை நடத்தி வருகிறார். அவரை திருவல்லிக்கேனி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர் தமிழ்கன் தளத்தின் நிர்வாகி தான் தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதோடு நூற்றுக்கணக்கான போலி ஐடியுடன் புதிய படங்களை பதிவேற்றம் செய்திருப்பதும், ஆபாச இணைய தளங்களுக்கு வீடியோக்கள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் 50க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
நேற்று இரவு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, செயற்குழு உறுப்பினர் உதயா ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்தனர். இதுகுறித்து விஷால் கூறும்போது "புதிய திரைப்படங்களை இணைய தளத்தில் பதிவேற்றும் முக்கிய நபர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம். அவர்குறித்த தகவல்களை போலீசிடம் கொடுத்துள்ளோம். அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற விபரங்களை போலீசார் தெரிவிப்பார்கள்" என்றார்.
கவுரி சங்கர் மீது வழக்கு பதிவு செய்து இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.