ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பேட்டா பிரச்சினைக்காக மதுரையில் நடந்து வந்த பில்லா பாண்டி படத்தை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது. இதனால் கோபம் அடைந்த தயாரிப்பாளர் சங்கம், இனி யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் வேலை செய்வோம் என்று அறிவித்தது. அதோடு புதிய பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் ஏற்பாடு செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெப்சி, கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்தது. இதனால் 40 படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஒவ்வொரு சங்கத்திற்கென்றும் தனித்தனி பேச்சு வார்த்தை நடத்தி சம்பளமும், சில புதிய விதிமுறைகளும் தீர்மானிக்கப்பட்டது. டெக்னீஷியன் யூனியன் தவிர மற்ற அனைத்து சங்கங்களுடன் பேஸ் டூ பேஸ் பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது. நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
"இருதரப்புக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது. எல்லா சங்கங்களுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக நடந்த வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும். இனி எந்த காரணம் கொண்டும் யாராலும் படப்பிடிப்பை நிறுத்த முடியாத அளவிற்கு கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் விதிமுறைகள் ஒரு புத்தகமாக அச்சிடப்பட்டு அது பெப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது" என்றார் பெப்சி நிர்வாகி ஒருவர்.