டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.
ஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.