கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரகாஷ்ராஜை தேடிவந்தது.
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே கோழிக்கோட்டிலும், வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பாலக்காட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் கலந்து கொண்டு நடித்து வரும் பிரகாஷ்ராஜ், 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில், தமிழில் 'இருவர்' படத்தில் மோகன் லாலுடன் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.