பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மலையாளத்தில் 2010ல் பிருத்விராஜுடன் நடித்த 'அன்வர்' படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இடைவெளி விட்டு 'அச்சயன்ஸ்' என்கிற படத்தில் ஜெயராமுடன் சேர்ந்து நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், அடுத்ததாக மோகன்லாலுடன் 'ஒடியன்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரகாஷ்ராஜை தேடிவந்தது.
விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஏற்கனவே கோழிக்கோட்டிலும், வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பாலக்காட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். இதில் கலந்து கொண்டு நடித்து வரும் பிரகாஷ்ராஜ், 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில், தமிழில் 'இருவர்' படத்தில் மோகன் லாலுடன் நடித்ததை தொடர்ந்து, தற்போது மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.