தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரது காதல் திருமணம் அக்டோபர் மாதம் 6ம் தேதி இந்து, கிறித்துவ முறைப்படி கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. அந்த திருமண வைபவத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும், முக்கியமான சில குடும்ப நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் திருமணத்திற்கு அழைப்பு இல்லை. திருமணத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு குடும்ப விழாவாகத்தான் நடக்க உள்ளது.
அதன் பின் அக்டோபர் 10ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்வு நடைபெற உள்ளது. இதை நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகார்ஜுனா ஏற்பாடு செய்துள்ளார். இந்தத் திருமண வரவேற்பிற்குத்தான் திரையுலகினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர் பிரபலங்கள் என அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்படுமாம். அதற்கான வேலைகளை நடிகர் நாகார்ஜுனா இப்போதே ஆரம்பித்துவிட்டார். நாக சைதன்யாவும், சமந்தாவும் திருமண வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் அவர்களுக்கு நெருக்கமானவர்களை திருமணத்திற்கு அழைப்பதை தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
புகழின் உச்சியில் இருக்கும் போதே சமந்தா திருமணம் செய்து கொள்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் திருமணத்திற்குப் பின்பும் சமந்தா நடிக்க உள்ளார். அது எத்தனை வருடங்கள் தொடரும் என்பதுதான் கேள்வி.