டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தவரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து அவரிடம் கேட்டபோது...
"உயிரிழந்த மாணவி அனிதாவின் தற்கொலையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிரா போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்களுக்கு காலம் உரிய பதில் அளிக்கும்" என்றார்.
இந்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தது போன்று செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் "காலம் பதில் சொல்லும்" என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால், பா.ஜ.கா.,வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.
சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா? என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும், எனக்கும், அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.