பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், 8 ஆண்டுகளுக்குப்பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் பிரம்மா இயக்கத்தில் அவர் நடித்துள்ள மகளிர் மட்டும் திரைக்கு வரத்தயாராகி விட்டது. இந்த படத்தின் ஆடியோ விழாவில், பெண் எழுத்தாளர்களுக்கு சினிமாத்துறையினர் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று பேசிய ஜோதிகா, நயன்தாராவைப் பற்றியும் ஒரு ஆச்சர்யத் தகவலை தெரிவித்தார்.
அதாவது, எனக்கு 36 வயதினிலே படத்திற்கு பிறகு உடனடியாக படம் கிடைக்கவில்லை. அடுத்த படத்திற்காக ஒன்றரை வருடம் காத்திருந்தேன். ஆனால் நயன்தாராவுக்கு தொடர்ந்து படங்கள் கிடைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பிசியாக இருக்கிறார். அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.