ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பைசா வசூல் படத்தில் நடித்து வந்த பாலகிருஷ்ணா, தற்போது கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. அந்த படத்தை சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்குகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணா விடுத்துள்ள ஒரு செய்தியில், நான் யாருக்கும் ரசிகன் இல்லை. எனக்கு நானே ரசிகன். என் தந்தை என்.டி.ஆர்., நடித்த படங்களை பார்ப்பேன். அவர் எனக்கு கடவுள் மாதிரி. தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் நான், இதையடுத்து என் தந்தையின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறேன். அந்த படம் எனது சினிமா கேரியரில் மிக முக்கியமான படம். அதோடு, எனக்கு மனதளவில் திருப்தி தரப்போகிற படம் என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணா.