'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரன் குமார். சமீபத்தில் வெளியான காதல் கசக்குதய்யா படம் வரை இவர் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். தரன்குமாருக்கும், ஆகம், நகர்வலம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள தீக்ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 15-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. செப்டம்பர் 16-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று மாலை தரன்குமார்-தீக்ஷிதா ஆகிய இருவரும் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி திருமணத்திற்கு முறைப்படி அழைத்தனர்.
தீக்ஷிதா பேசுகையில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் செய்து வந்தேன். அதோடு டிசைனிங்கிலும் எனக்கு ஆர்வம். அதனால் தொடர்ந்து சினிமாவில் காஸ்டியூம் டிசைனராக தொடரப் போகிறேன். இப்போது இரண்டு படங்களில் காஸ்டியூம் டிசைனராக நான் கமிட்டாகியிருக்கிறேன் என்றார்.