வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
மலையாள படமான டிராபிக் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் தயாரித்தது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் அஜய், நெப்போலியன், சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா பிரேம் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். ஜேபியார் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம்மோகன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை வருகிற 15ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். விஷால் நடித்துள்ள துப்பறிவாளன், ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும், களத்தூர் கிராமம், யார் இவன் படங்கள் வெளிவருகிறது. இதில் துப்பறிவாளன் படம் சுமார் 500 தியேட்டர்களில் வெளிவருகிறது, மகளிர் மட்டும் 300 தியேட்டர்களில் வெளிவருகிறது. இதனால் சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் - 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்கிறது அந்த செய்தி குறிப்பு.