இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா மையத்தின் சார்பில் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சாரம் அக்டோபர் 2ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரமாண்ட விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் சென்னையில் நேற்ற நடந்தது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஈஷா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக விழாவை ரஜினி வாழ்த்திய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள், பூமியின் ரத்த நாளங்கள். அவற்றை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதியாக்க வேண்டும். இதற்கு மாபெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் சத்குருவுக்கு துணையிருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.