இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, வார இறுதியில் கமலின் அரசியல் மேடையாக மாறிவிடுகிறது. தனது அரசியல் கருத்துக்களை ஆணித்தரமாக கூறி வருகிறார். கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நீட் தேர்வு பிரச்னையில் நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். அவர்களை தெருவில் நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் அனைவரும் விளையும் பயிர்கள். நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டு விட்டோம் . அவர்களை கல்விக்கூடத்திற்கு அனுப்பி விட்டு நாம் தான் போராடியிருக்க வேண்டும்.
பக்கத்து மாநிலங்களில் இருக்கிறவர்கள் 'நீட்'டை ஏற்றுக்கொண்டு விட்டார்களே, நீங்கள் மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்கலாம். அவர்களெல்லாம் அதற்கு தேவையான முன் ஜாக்கிரதையில் தயார் நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இங்கே அதற்கான எந்த ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை.
பன்முகம், பல மொழிகள் இருக்கும் இந்த நாட்டில் மாநில அரசுகளிடம் தான் கல்வி உரிமை இருக்க வேண்டும். முன்பு அப்படித்தான் இருந்தது. எமர்ஜென்சி சமயத்தில் அந்த உரிமையை தவற விட்டோம். அதை மையத்தில் கொண்டு போய் வைத்துக்கொண்டார்கள் . அதன்பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. மாநிலங்கள் கல்வி திட்டங்களை வகுக்கும் அந்தஸ்தை, பொறுப்பை, பலத்தை, சக்தியை தங்கள் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் கமல்.