இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆந்திராவைச் சேர்ந்தவர் பூனம் கவுர். தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சேவல், உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனி வழி, நாயகி படங்களில் நடித்தார்.
தற்போது நண்டு என் பிரண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று படத்தை இயக்கிய ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். ஜித்தன் ரமேஷ், ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. ஒரு சிலநாட்கள் நடித்த நிலையில் நடிகை பூனம் கவுர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஐதராபாத் சென்று விட்டார். இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு. "என்னால் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது. மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை" என்றார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறியதாவது:
எங்கள் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒப்பந்தம் செய்யும்போது எனது உடைகளை நானே தேர்வு செய்கிறேன். அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என்றார் நாங்களும் ஒப்புக் கொண்டோம். நாங்கள் எடுப்பது சிறு பட்ஜெட் படம். ஆனால் அவர் உயர்ரக ஆடைகளை கொண்டு வந்து அதிக பணம் கேட்டார். எங்களுக்கு அவ்வளவு பட்ஜெட் இல்லை என்றோம். அதிலிருந்து பிரச்சினை பண்ண ஆரம்பித்தார். நட்சத்திர ஒட்டலில்தான் அறை எடுத்துக் கொடுத்தோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டார். இதனால் தயரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம். இதுகுறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்ய இருக்கிறோம் என்றார்.