Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எது நடந்தாலும் நடிகைகள் முடங்கிவிடக்கூடாது: மனம் திறந்தார் பாவனா

10 செப், 2017 - 15:29 IST
எழுத்தின் அளவு:
Bhavana-interview-on-actresses

நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார். மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன். சாதாரண ஒரு நடிகையாக இருந்துவிட்டு விலகுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இத்தனை உயரத்துக்கு செல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சினிமா ஒரு ஆணாதிக்க துறை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எந்த நடிகையாலும் இங்கு தங்களுக்கான சினிமாவை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை. இங்கு நடிகர்களுக்குதான் முக்கியத்தும் இருக்கிறது. அவர்களை வைத்துதான் சினிமாவின் வியாபாரம் பேசப்படுகிறது. சேர்ட்டிலைட் உரிமம் விற்கப்படுகிறது. சம்பளமும் அவர்களுக்குத்தான் அதிகம். நான் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக எனக்கு யாரும் சம்பளம் அதிகமாக தந்ததில்லை. பல படங்களுக்கு பேசிய சம்பளத்தைகூட தந்ததில்லை என்பது வேறு.


சினிமாவில் சில இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக சினிமாவுக்கு வரவேண்டும். ஒரு வேளை சில அசம்பாவிதங்களை, விரும்பதகாத விஷயங்களை சந்திக்க நேர்ந்தால் அதற்காக முடங்கிவிடக்கூடாது. மலையாள சினிமாவில் பெண்களுக்கென்று தனி சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் அதில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் பணிகளை பாராட்டுகிறேன். பல நடிகைகள் தங்களுக்கு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று கூறி அதற்கான தீர்வுகளை பெறுகிறார்கள்.


எனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களிலிருந்து நாள் மீள்வதற்கு எனது குடும்பத்தினரும் எனது ரசிகர்களும் துணையாக இருந்தார்கள். என் வருங்கால கணவர் என்னை தாங்கிப் பிடித்தார். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன். எப்போதும் தைரியத்துடனும், மனவலிமையுடனும் இருப்பதால் என்னை எப்போதும், யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார் பாவனா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in