பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார். மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன். சாதாரண ஒரு நடிகையாக இருந்துவிட்டு விலகுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இத்தனை உயரத்துக்கு செல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சினிமா ஒரு ஆணாதிக்க துறை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எந்த நடிகையாலும் இங்கு தங்களுக்கான சினிமாவை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இல்லை. இங்கு நடிகர்களுக்குதான் முக்கியத்தும் இருக்கிறது. அவர்களை வைத்துதான் சினிமாவின் வியாபாரம் பேசப்படுகிறது. சேர்ட்டிலைட் உரிமம் விற்கப்படுகிறது. சம்பளமும் அவர்களுக்குத்தான் அதிகம். நான் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக எனக்கு யாரும் சம்பளம் அதிகமாக தந்ததில்லை. பல படங்களுக்கு பேசிய சம்பளத்தைகூட தந்ததில்லை என்பது வேறு.
சினிமாவில் சில இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக சினிமாவுக்கு வரவேண்டும். ஒரு வேளை சில அசம்பாவிதங்களை, விரும்பதகாத விஷயங்களை சந்திக்க நேர்ந்தால் அதற்காக முடங்கிவிடக்கூடாது. மலையாள சினிமாவில் பெண்களுக்கென்று தனி சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நான் அதில் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் பணிகளை பாராட்டுகிறேன். பல நடிகைகள் தங்களுக்கு இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று கூறி அதற்கான தீர்வுகளை பெறுகிறார்கள்.
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களிலிருந்து நாள் மீள்வதற்கு எனது குடும்பத்தினரும் எனது ரசிகர்களும் துணையாக இருந்தார்கள். என் வருங்கால கணவர் என்னை தாங்கிப் பிடித்தார். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன். எப்போதும் தைரியத்துடனும், மனவலிமையுடனும் இருப்பதால் என்னை எப்போதும், யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார் பாவனா.