சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
டைரக்டர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி உள்ளாராம். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். பெயரிடப்படாத இந்த படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாம்.
அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரை வைத்து டைரக்டர் மணிரத்னம் புதிய படம் இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேசும் நடிப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஒன்றும் மேற்பட்ட ஹீரோக்களை வைத்து மணிரத்னம் இயக்க உள்ள இந்த புதிய படத்தில் சிம்புவும் நடிக்கிறாராம். மணிரத்னத்தின் முந்தைய படமான காற்று வெளியிடை தோல்வி படமாக அமைந்துள்ளது. இதே போன்று சிம்பு நடித்த அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படமம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த புதிய படத்தின் மூலம் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிம்பு, ஆங்கில படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ள இப்படத்திற்கு கவுதம் மேனன் கதை வசனம் எழுதி உள்ளாராம்.