விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
கடந்த சில நாட்களாக நடிகை டயானா பென்டி, தனது அடுத்த படமான லக்னோ சென்ட்ரல் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ரஞ்சித் திவாரி இயக்கி உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டயானாவிடம், பரான் அக்தருடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பரான் அக்தர் ஒரு பன்முக திறமைக் கொண்டவர். துவக்கத்தில் அவரை பார்த்தாலே எனக்கு பயமாக இருந்தது. சற்று பதற்றமாகி விடுவேன். பின்னர் அது அனைத்தும் சரியாகி விட்டது. என்னை அந்த அளவிற்கு சவுகரியமாக உணர வைத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடம் இருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.