இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் பாலசரவணன். அதில் அவர் மதுரை தமிழ் பேசி நடித்ததை ப்பார்த்து சசிகுமார் தனது குட்டிப்புலி படத்தில் அவரை காமெடியனாக்கினார். அதையடுத்து பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், ராஜாமந்திரி என பல படங்களில நடித்த பாலசரவணன், விஜய்யை வைத்து படம் இயக்க என்னிடம் கதை உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில, தற்போது அவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டி யன் நடித்து வரும் மதுரவீரன் படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். மதுரைக்காரரான பாலசரவணன், இந்த படமும் மதுரை மண்வாசணை கதை என்பதால், அதிக உற்சாகத்துடன் நடித்துவருவதாக சொல்கிறார்.
அதோடு, மதுரைக்கென்று ஒரு கெத்து உள்ளது. அதை இந்த படத்தில் வெளிப்படுத்தி நடித்துள்ளேன். இதற்கு முந்தைய மதுரை கதைகளில் அந்த அளவுக்கு எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் நானே மெயின் காமெடியன் என்பதால் அதிகப்படியான ஈடுபாடு காண்பித்து நடித்துள்ளேன். அதனால், இந்த மதுரவீரன் படம், சண்முகப்பாண்டியனை மாதிரி எனக்கும் திருப்புமுனை படமாக அமையும் என்கிறார் பாலசரவணன்.