‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் தனது புதிய படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது துருக்கி சென்றுள்ளார்.
படக்குழுவினருடன் ஜியார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு சாலை வழியாக சென்றுள்ளனர். அப்போது துருக்கி எல்லையில் சிக்கிக் கொண்டனர். எல்லை பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்பு கொண்ட உதவி கேட்க முடியாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக படக்குழுவினருடன் கவுதம் தவித்துள்ளார்.
மிக அழகான துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடத்த வந்த தாங்கள் எல்லையில் சிக்கிக் கொண்டு இருப்பதாகவும், இதனை படிப்பவர்கள் யாராவது உதவி செய்யுமாறும் கவுதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேமிரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுடன் சிக்கிக் கொண்டிருக்கும் தனக்கும், தனது படக்குழுவினருக்கும் உதவுமாறு டுவிட்டரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.